ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் கைது

சேலம்: ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபால் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். காவலரை தரக்குறைவாக பேசிய புகாரில் கனகராஜின் அண்ணன் தனபாலை போலீசார் கைதுசெய்தனர். தாரமங்கலம் – நங்கவள்ளி சாலையில் காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியே வந்த தனபால், காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரையிடம் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளியாகியது.

தரக்குறைவாக பேசியதோடு, காவலரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டதாக புகார் தெரிவிக்கபப்ட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் அழகுதுரை கொடுத்த புகாரின் பேரில் தனபாலை போலீசார் கைது செய்தனர். 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தனபாலை, போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related posts

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு