தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காமரெட்டி தொகுதியில் முதல்வர் கேசிஆர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியும், பா.ஜ சார்பில் வெங்கடரமணா ரெட்டியும் போட்டியிட்டனர். பதவி விலகிய முதல்வரும், முதல்வர் பதவி ஏற்க உள்ளவரையும் எதிர்கொண்ட வெங்கடரமணா ரெட்டி 6,741 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதுபற்றி வெங்கடரமணா ரெட்டி கூறுகையில்,’ கே.சி.ஆர் மற்றும் ரேவந்த் ரெட்டியை எதிர்த்து வெற்றி பெற்றதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். நான் உள்ளூர்வாசி. எங்கேயும் போய்விடமாட்டேன் என்று மக்களிடம் பிரசாரம் செய்தேன். மக்கள் வெற்றியை கொடுத்துள்ளார்கள்’ என்றார்.