சென்னை: காமராஜரின் 121வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர் தூவி மரியாதை செய்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் காமராஜர் உருவப்படத்திற்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். எளிமை, நேர்மை இவையே தனது கொள்கையென கொண்டு தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர் காமராஜர் என இபிஎஸ் புகழாரம் சூட்டினார்.