டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பணிவு, அர்ப்பணிப்பை போற்றுகிறேன் என ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவரான காமராஜரின் நினைவு நாளில் அவருக்கு பணிவான அஞ்சலி. ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்கான அவரது தொலைநோக்கு கொள்கைகள் இன்றளவும் ஊக்கமளிக்கிறது என்றும் தெரிவித்தார்.