ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். 2006ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15ம் நாளினை “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்தார். அதன்படி காமராஜரின் பிறந்த நாளானது தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிலையில், காமராஜரின் 122-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது கல்விப் பணியை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; காமராஜரின் கல்விப் பணி என்றும் நினைவில் நிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாரத ரத்னா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஸ்ரீ கே.காமராஜ் ஜியின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள்.
ஒரு உண்மையான தேசபக்தர் மற்றும் வெகுஜனத் தலைவர், அவர் அயராது உழைத்து, நமது சமூகத்தின் நலிந்த பிரிவினரை உயர்த்துவதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்தினார்.
கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும். இவ்வாறு ராகுல் குறிப்பிட்டுள்ளார்.