Wednesday, September 18, 2024
Home » மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

by Suresh

சென்னை: மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாதது குறித்து கமல்ஹாசன் பதிவுக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாதது குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது; “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” என கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது; ” தலைவர் கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கெனத் தனி இடம்பெற்றவரும் என் மீது அளவற்ற அன்புகொண்டவருமான அருமை நண்பர் மக்கள் நீதிமய்யம் தலைவர் ‘கலைஞானி’ கமல்ஹாசன் அவர்களது வாழ்த்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

eight − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi