இதற்காக கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் கார்யம் சுந்தரேசன், செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ.62 லட்சத்து 97 ஆயிரத்து 246 ரொக்கமும், 193 கிராம் தங்கமும், 559 கிராம் வெள்ளியும் கோயிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.