அப்போது நஇருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?. பட்டியலின, பழங்குடியின மக்களின் சலுகைகள் அவர்களை சென்றடைந்துள்ளதா?.
அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள் கல்வராயன் மலைப்பகுதி மக்களை சென்றடைந்துள்ளதா?. மக்களின் ஓட்டுகளை பெற்ற பின், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா?இல்லையா ? என்பதை கவனிக்கவில்லை என்றால் அரசின் அரசியலமைப்பு கடமை என்ன?
இத்தனை ஆண்டுகளாக கலெக்டர், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் என்ன செய்கின்றனர்?. இவ்வாறு கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, ஜூலை 24ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் தமிழ்மணியை நியமித்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.