சென்னை : கழுகுமலை சமண தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நிதி ஒதுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அடிப்படை வசதிகளுக்காக ரூ.33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசின் வாதத்தை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.