கல்பாக்கம்: கல்பாக்கம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நெடுமரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். காயமடைந்த ஒரு பெண் மற்றும் கைக்குழந்தை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மற்றொரு காரில் வந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.