சென்னை :கள்ளக்குறிச்சி விவகாரம் போல் வருங்காலங்களில் மீண்டும் நடக்காத வகையில் நடவடிக்கை தேவை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய அவர், கடுமையான சட்டத்தால் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அரசோடு சேர்ந்து இதனை எப்படி தடுப்பது என எதிர்க்கட்சி யோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.