கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ,”மருத்துவமனையில் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேரின் உடல்நிலை முன்னேறியுள்ளது. கள்ளச்சாராய புழக்கம் இருந்த 20 இடங்களில் மருத்துவ குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விஷ சாராயத்தால் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன”இவ்வாறு தெரிவித்தார்.