கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீடு வீடாக சென்று இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.