சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளோடு இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11-ம் தேதி மற்ற மனுக்களோடு சேர்த்து வழக்கை விசாரிப்பதாக நீதிபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.