சென்னை : விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இழப்பீடு தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விஷச்சாராயம் குடித்து இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தரும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.