சென்னை: “ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கேட்டுத்தான் அன்றைக்கு ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தார். இன்றைக்கு பழனிசாமியுடன் உண்ணாவிரதம் இருந்த பொன்னையனிடம் அதைக் கேட்டு அவர் தெரிந்து கொள்ளட்டும். ஏனென்றால் 2017-ல் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றவர் பொன்னையன்” என கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.