கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினார். முன்னதாக இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டோரை சந்தித்தார். பிரேமலதா விஜயகாந்த், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினர்.