கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதாரமற்ற குடிநீர் குடித்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வந்த குடிநீர் குடித்த 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், பேதி; அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். அதன் பிறகு தொட்டியின் மோட்டார் சரி செய்து நேற்று முன் தினம் குடிநீர் வழங்கப்பட்டது.

 

Related posts

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

செப் 18: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை