சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தனர். துயர சம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். விஷச் சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக முதல்வர் தெரிவித்திருக்கிறார் என்று அவர் தெரிவித்தார். விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.