மேலும் அதிமுகவை பொறுத்தவரையில் தமிழக சட்டப்பேரவை தொடங்கியதில் இருந்து கருப்புசட்டை அணிந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை மையப்படுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும் நேற்று அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து அடுத்தகட்டமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சந்தித்து மனு அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இருமாநில தொடர்புள்ளதால் ஒன்றிய அரசு கைவசம் உள்ள சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.