கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தாய், 2 குழந்தைகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நரிமேடுபகுதியில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே பெண் ஒருவரும், 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர். தடயங்கள் அழிக்க சடலங்கள் மீது மிளகாய் பொடியை தூவி உள்ளனர்.
வீட்டின் வெளியே இருந்த கன்றுகுட்டி மற்று, 5க்கும் மேற்பட்ட கோழி குஞ்சிகளும் இறந்து கிடந்தது. விசாரணையில், சடலம் மீட்கப்பட்ட வீட்டில் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன், மனைவி வளர்மதி (37), இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தது தெரிந்தது. மணிகண்டன் கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, வளர்மதி (37) தனது மகன் தமிழரசன் (11), 8 மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். தனது கணவர் பயன்படுத்திய மினிடெம்போ மூலம் கிராம கிராமமாக காய்கறி வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.கொலை நடந்து 2 நாட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வளர்மதி பயன்படுத்திய செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள் யார் விசாரித்து வருகின்றனர்.