சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சம்பவத்துக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் பிடியில் நிறுத்தப்பட வேண்டும். விஷச் சாராயத்துக்கு பயன்படுத்தப்படும் மெத்தனாலை விற்க நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.