கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 143 பேரில் 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அரசு மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 24 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று அரசு மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.