கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கழிவுநீர் வடிகால் மற்றும் தோட்டங்களில் மெத்தனாலை மறைத்து வைத்து விற்றது அம்பலமானது. விஷ சாராயம் மரண வழக்கில் கைதான ஹரிமுத்துவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். விஷ சாராய மரண வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய தகவல் வெளியானது. மாதேஷிடம் இருந்து பெறப்படும் மெத்தனால் பேரல்களை மறைத்து வைக்கும் பணியில் ஹரிமுத்து ஈடுபட்டுள்ளார்