விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பாண்டூர் ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் சாலையில் மக்கள் மறியல் செய்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.