மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 129 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது தவிர கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 13 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 8 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 32 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் (67), இளையராஜா (40), நாராயணன் (‘60), பாவாடை (53) ஆகிய 4 பேரும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினர்களை பார்த்து வருவதாக கூறி விட்டு வெளியில் சென்ற 4 பேரும் பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பி வரவில்லை. ஒரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமலேயே 4 பேரும் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள். ெமாத்தமுள்ள 64 பேரில் இங்கு மட்டும் 38 பேர் பலியாகி உள்ளனர்.