இந்த வழக்கில் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் கே.பாலு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதிலளித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெற்று வரும் நிலையில் சிபிஐக்கு மாற்ற அவசியம் இல்லை. கள்ளச்சாராயத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அதிமுக மற்றும் பாமக தொடர்ந்த வழக்குகளில் ஏற்கனவே பதில் மனுக்களும், அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிய மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டியுள்ளது என்றார். இதையடுத்து, அனைத்து மனுதாரர்களுக்கும் அறிக்கையும், பதில் மனுக்களும் வழங்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.