அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா வரும் சித்திரை மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், கால்கோள் எனப்படும் பந்தல்கால் நடும் விழா கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க திரிபுரசுந்தரியம்மன் சன்னிதானம் எதிரே உள்ள கொடிமரம் அருகே ஒரு பந்தல்கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பஞ்ச ரதங்களுக்கு (தேர்களுக்கு) சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவின் போது கோயில் செயல் அலுவலர் பிரியா, மேலாளர் விஜயன் மற்றும் உபயதாரர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.