சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸ், கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்தும் இதுவரை புகார் வரவில்லை எனவும் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் விடுப்பில் இருந்தனர். இந்நிலையில் இருவரும் திங்களன்று நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

Related posts

பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்

புரட்டாசி மாதத்தால் ஆண்டிபட்டி ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்: ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே சேல்ஸ்

நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி