கலாஷேத்ரா கல்லூரியில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நாளை நேரில் விசாரணை

சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் நாளை விசாரணை. கலாஷேத்ரா மாணவிகளின் போராட்டம் குறித்த செய்தி அடிப்படையில் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்த உத்தரவு அளித்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு நாளை நேரில் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. மனித உரிமை ஆணையத்தின் இயக்குனர் நேரில் விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை அளிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் மீது மாணவிகள் கூறிய பாலியல் புகார் பற்றி ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது