டெல்லி : நீட் முறைகேடு குறித்து மக்களவையில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கலாநிதி வீராசாமி வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகவும் கலாநிதி வீராசாமி வலியுறுத்தி உள்ளார்.