சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க முடியாமல் போன பெண்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய அளிக்கப்பட்டுள்ள அவகாச காலத்திலேயே புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.