மதுரை: கள்விற்பனை செய்ய அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. உள்துறை செயலர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சட்டப்பிரிவு 47ன் படி உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் அவர்களின் பதிலை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கள் விற்பனைக்கு அனுமதி கோரி மனு: அரசு பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை
previous post