இந்த கூட்டத்தில் காக்களூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும் அளவிற்கு ஊராட்சி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இந்நிலையில் ஏழ்மையான, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தினக்கூலி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வரும் மக்கள் அதிக அளவில் உள்ளனர்.
மேலும், காக்களூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கும்போது வீட்டு வரி, நிலவரி, குடிநீர் வரி அனைத்தும் உயர்ந்துவிடும். இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகக்கூடிய நிலைமை ஏற்படும். எனவே காக்களூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.