கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை

கச்சத்தீவு: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்து 4 நாட்டு படகுகளையும், அதிலிருந்த மீனவர்களையும் சிறை பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

விசாரணைக்கு பின்னர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறை பிடிக்கப்பட்ட 23 நாட்டுப்படகு மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் விவரம் வெளியாகவில்லை. காங்கேசன் துறைமுகம் கடற்கரை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு பின்னரே தமிழக மீனவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரியவரும்.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்