சென்னை: ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும்பயணத்தின் முதலடி எடுத்து வைத்த நாள் இன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள், நீதிக்கட்சி தொடங்கிய நாள் என்றும் தெரிவித்தார். கொள்கை களத்தில் புதிய சவால்கள், புதிய எதிரிகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம் எனவும் கூறினார்.