விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீர், கடந்த ஜூன் மாதத்திற்கானது 6 டிஎம்சி. அதை இன்னும் தரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் தான் தமிழகத்திற்கு முறையான அளவு, தண்ணீர் அனுப்புங்கள் என்று கர்நாடக அரசிடம் கூற வேண்டும். எனவே போர்டு சேர்மனிடம், தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கிறது. நமக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட சொல்லுங்கள் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் செல்கிறோம்.ஜெயலலிதா ஏற்கனவே முதலமைச்சர் ஆக இருந்தார். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார். அப்போதும் இதேபோன்ற தண்ணீர் பிரச்னை ஏற்படத்தான் செய்தது. அப்போது அவர்களுக்கு தேவையான கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தது. எனவே இதில் கட்சி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. நமக்கு நியாயமான, சட்டப்படி வரவேண்டிய தண்ணீரை திறந்து விடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.