ஆனால் இது நடப்பாண்டு மே மாதத்தை விட 5% குறைவாகும். இருப்பினும் இதே நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் அடுத்த ஆண்டு விமான பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் சேவையை வழங்கி வந்த கோ பரஸ்ட் நிறுவனம் முடங்கி இருக்கும் நிலையில் இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் ஆசியா, ஆகாச ஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடைந்து இருக்கின்றனர். அந்த நிறுவனங்களுக்கான வருவாயும் அதிகரித்து இருக்கிறது.