இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.ராஜகோபால், ஜி.கார்த்திகேயன் ஆகியோர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மூத்த உள்துறை அதிகாரிகளுடனும், காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.