வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி இந்த தகவலை தெரிவித்தார். அப்போது வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, நீதிபதிக்கு நேரடியாக கடிதம் அனுப்பியது குறித்து மனுதாரர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தின் கண்ணியத்தை பேணுவதற்காக, வழக்கில் ஆஜராவதில் இருந்து விலகிக்கொள்கிறேன்என தெரிவித்தார். இதையடுத்து, தனக்கு நேரடியாக கடிதம் எழுதியது நீதி பரிபாலனத்தில் தலையிடுவதைப் போல உள்ளதாக கூறிய நீதிபதி, நம்பிக்கை இழந்த நிலையில் இதுபோல கடிதம் எழுதியிருக்க கூடும் என்பதால் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை. வழக்கை தொடர்ந்து விசாரிக்க விரும்பவில்லை. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.