கடந்த ஏப்ரலில், தடை செய்யப்பட்ட சில கணக்குகள் மீண்டும் செயல்படுத்தியதற்காக எக்ஸ் நிறுவனம் பிரேசிலில் சட்டப்பூர்வ பிரதிநிதியை 24 மணி நேரத்தில் நியமிக்க கெடு விதிக்கப்பட்டது. இந்த 24 மணி நேர கெடு முடிந்ததைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவின்படி எக்ஸ் தளத்திற்கான தடையை அமல்படுத்தும் நடவடிக்கையை பிரேசில் அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான அனாடெல் எடுக்கத் தொடங்கியது. இது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.