சென்னை, திருச்சி, தஞ்சாவூர் மண்டலங்களின் இணை இயக்குநர்கள் பணி ஆய்வு கூட்டம்: அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் சென்னை மாநில செய்தி நிலையக் கூட்டரங்கில் சென்னை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களின் இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

நினைவகங்கள், அரங்கங்கள், மணிமண்டபங்கள், நினைவுத் தூண்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, பழுதுகள் இருந்தால் உடனே மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்து பணிகளை முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டினார். துறை செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இயக்குநர் மோகன் வரவேற்றார். கூடுதல் இயக்குநர் சாந்தி, கூடுதல் இயக்குநர் தமிழ்செல்வராஜன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், பொதுப்பணித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!