டெல்லி : ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிராக தொடாப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தை நாட ஹேமந்த் சோரன் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. கைது உத்தரவு மற்றும் அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக் கோரி ஹேமந்த் சோரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.