நேற்றுமுன்தினம் முகப்பேர் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டபோது ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது ஆவடி அருகே திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26) என்பதும் வையாபுரி வீட்டில் கொள்ளையடித்தவர் என்பதும் தெரிந்தது. இவரது நண்பர்கள் 2 பேர், கோவை மாவட்டத்துக்கு தப்பிச்சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீதர் கொடுத்த தகவல்படி, கோவையில் பதுங்கியிருந்த ஆவடி பகுதியை சேர்ந்தஅகில்குமார்(21), காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விக்கி(எ) விக்னேஷ்(19) ஆகியோரை கைது செய்து 17 சவரன் நகை மற்றும் 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.