திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு: ஹெல்மெட் ஆசாமிகள் கைவரிசை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் சரவணா நகரைச் சேர்ந்தவர் பத்மாவதி (75). திருவள்ளூர் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் வசிக்கும் இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்த குப்பைகளை எடுத்துக்கொண்டு சாலையை கடந்து குப்பையைக் கொட்டிவிட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார். சாலையை கடந்தபோது ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் 2 ஆசாமிகள் வேகமாக வந்துள்ளனர்.

அதில் பின்னால் அமர்ந்திருந்தவன் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துள்ளான். இதனைத்தொடர்ந்து இருவரும் மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். இதுகுறித்து மூதாட்டி திருவள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஹெல்மெட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்