Sunday, June 30, 2024
Home » தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரிப்பு; தங்கம் சவரன் ₹48,720க்கு விற்பனை: புதிய வரலாற்று சாதனை; ஒரு வாரத்தில் ₹2,240 எகிறியது

தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரிப்பு; தங்கம் சவரன் ₹48,720க்கு விற்பனை: புதிய வரலாற்று சாதனை; ஒரு வாரத்தில் ₹2,240 எகிறியது

by MuthuKumar

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ஒரு சவரன் ₹48,720 என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. ஒரு வாரத்தில் மட்டும் சவரன் ₹2240 எகிறியுள்ளது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்தோடு காணப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹46,480க்கு விற்கப்பட்டது. பிறகு தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது. 29ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து ஒரு சவரன் ₹46,520க்கும், 1ம் தேதி தங்கம் சவரனுக்கு ₹200 உயர்ந்து ஒரு சவரன் ₹46,720க்கும் விற்கப்பட்டது. 2ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்று மட்டும் சவரனுக்கு ₹800 உயர்ந்து ஒரு சவரன் ₹47,520க்கு விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரன் ₹1040 வரை உயர்ந்தது. இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி சவரனுக்கு ₹80 மட்டும் குறைந்து ₹47,440க்கு விற்கப்பட்டது. ஆனால் மறுநாளே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர ெதாடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதாவது 5ம் தேதி சவரனுக்கு ₹680 உயர்ந்து ஒரு சவரன் ₹48,120க்கு விற்பனையானது.

தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்து ஒரு சவரன் ₹48,320க்கு விற்பனையானது. இது வரலாற்று சாதனையானது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. நேற்று மட்டும் கிராமுக்கு ₹50 உயர்ந்து ஒரு கிராம் ₹6,090க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ஒரு சவரன் ₹48,720க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையையும் படைத்தது. தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹1,280 உயர்ந்துள்ளது.

மேலும் 29ம் தேதி முதல் நேற்று வரை ஒரு வாரகாலத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹2240 வரை உயர்ந்துள்ளது. ஜெட் வேகத்தில் விலை அதிகரித்து வருவது தங்கம் வாங்குவோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே சென்றால் விரைவில் சவரன் ₹50 ஆயிரத்தை கடந்து விடுமோ என்ற ஏக்கமும் அதிர்ச்சியும் நகை வாங்குவோரிடையே ஏற்பட்டுள்ளது. விலை உயர்வால் நகை கடைகளில் வழக்கத்தை விட விற்பனை சற்று குறைந்தது.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi