ஜெருசலேம் நகரில் 3 பேர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றவரை சுற்றி வளைத்து சுட்டனர்

ஜெருசலேம்: ஜெருசலேம் நகரில் 3 பேர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றவரை சுற்றி வளைத்து சுட்டு கொன்றனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் சிக்கியுள்ள ஜெருசலேம் நகரில் வாகன ஒட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்ற 3 பேர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரை விரட்டி சென்றனர். இதனால் அந்த இடத்தில் பீதி ஏற்பட்டது. மேலும் காரிலிருந்து ஓட்டுனரை இறங்கச்சொல்லி எச்சரித்த சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்கள் கொந்தளிப்பு அடைந்ததால் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாகனத்தை சுற்றி வளைத்து சுட்டனர் பின்னர் வாகனத்தில் இருந்தவர் சடலமாக மீட்கப்பட்டார். கார் மோதியதில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார்.

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு