ஜெயலலிதா உயிரிழக்க ஓபிஎஸ்தான் காரணம் : ஆன்மா வஞ்சிப்பதால் ஒரு சீட்டுக்காக ரோட்டில் நிற்கிறார்.! போட்டு உடைத்த உதயகுமார்

பரமக்குடி, முதுகுளத்தூர், உசிலம்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதி அதிமுக ஊழியர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது: ராமநாதபுரம் தொகுதியில் இரட்டை இலையை எதிர்த்து யாரும் போட்டியிடுவதற்கு ஒரு தொண்டனும் அனுமதிக்கக் கூடாது. இரட்டை இலையை சொந்தம் கொண்டாட கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு வழக்கிற்கு எத்தனை தடவை நீதிமன்றம் செல்வது, எத்தனை தடவை வழக்கை நடத்துவது? எத்தனை தடவை தீர்ப்பு பெறுவது, எத்தனை தடவை லட்டு கொடுப்பது? ஜிலேபி கொடுப்பது? கடையிலேயே லட்டு, ஜிலேபி இல்லை. ஒ.பி.எஸ். மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட கட்ட முடியவில்லை, கட்சி பெயரை பயன்படுத்த முடியவில்லை.

என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர் வெளிநாட்டி கூட கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மவுன சாமியாராக இருந்துவிட்டார். ஜெயலலிதா உயிர் பறிபோக நீங்கள் தான் காரணம். அவரின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்சை வஞ்சிக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார். ஒரு முதல்வராக இருந்தவர் தற்போது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது வேடிக்கையானது. அவர், வெற்றி பெற்று நாட்டிற்கே ராஜாவானாலும் யாருக்கு என்ன பலன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா