என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர் வெளிநாட்டி கூட கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மவுன சாமியாராக இருந்துவிட்டார். ஜெயலலிதா உயிர் பறிபோக நீங்கள் தான் காரணம். அவரின் ஆன்மா இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு செல்லும் நிலையை உருவாக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்சை வஞ்சிக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார். ஒரு முதல்வராக இருந்தவர் தற்போது ஒரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது வேடிக்கையானது. அவர், வெற்றி பெற்று நாட்டிற்கே ராஜாவானாலும் யாருக்கு என்ன பலன். இவ்வாறு அவர் கூறினார்.