Wednesday, July 3, 2024
Home » சும்மா கத்தாதீங்க… எனக்கு காது கேட்குது: போட்டோகிராபர்களை திட்டிய ஜெயா பச்சன்

சும்மா கத்தாதீங்க… எனக்கு காது கேட்குது: போட்டோகிராபர்களை திட்டிய ஜெயா பச்சன்

by Neethimaan

மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெயா பச்சன், புகைப்படக்காரர்களை திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. பாலிவுட் மூத்த நடிகையும், எம்பியுமான ஜெயா பச்சன், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஸ்வேதா பச்சனுடன் வந்தார். அப்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி ெஜயா பச்சன் நடந்து சென்றார். அபிஷேக் பச்சனும், ஸ்வேதா பச்சனும் காரில் இருந்து இறங்கி வருவதற்கு சற்று தாமதமானது. அதனால் புகைப்படக்காரர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே ஜெயா பச்சனும் நின்றுவிட்டார். உடனே புகைப்படக்காரர்கள், தங்களது கேமராவுக்கு ‘போஸ்’ ெகாடுக்கும்படி ெஜயா பச்சனிடம் கேட்டனர்.

ஒரே நேரத்தில் பல புகைப்படக்காரர்கள் கூச்சலிட்டு கோரியதால், எரிச்சலடைந்த ஜெயா பச்சன் தனது கை விரல்களை காதில் வைத்துக்கொண்டு, ‘நான் ஒன்றும் காது கேட்காதவர் அல்ல; சும்மா கத்தாதீங்க… மெதுவாக சொல்லுங்க… என்று சிரித்துக்கொண்டே நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை நோக்கிச் சென்றார். அதைத் தொடர்ந்து அபிஷேக்கும், ஸ்வேதாவும் அவரை பின்தொடர்ந்து சென்றனர். புகைப்படக்காரர்களை ஜெயா பச்சன் திட்டுவது இது முதல் முறையல்ல என்றாலும், அவர்களுக்கும் அவரிடம் திட்டுவாங்குவது வாடிக்கையாகி விட்டது என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

You may also like

Leave a Comment

12 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi