பல்வேறு தருணங்களில் பாஜகவினரும் சங்பரிவாரத்தினரும் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தருணங்களில் பேசியிருக்கின்றனர். அவர்கள் மீது எல்லாம் இதுவரை சாதாரணக் கைது நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. இந்தியாவில் உபா சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 97% பேர் நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, கருத்துச் சுதந்திரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இவ்வாண்டு 159வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கான குரல்வளை நெறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் விதமாக உபா சட்டத்தைப் பயன்படுத்தும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.